Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்... டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு!

02:08 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

இன்று முதல் வேட்டையன் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.   

Advertisement

வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, ஜூன் 10ம் தேதி முதல் கூலி படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் கூலி படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கூலி படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

ரஜினியின் கால்ஷீட் பிரச்சினையா அல்லது லோகேஷ் தரப்பில் தாமதமா என தெரியாமல் ரசிகர்கள் சோகமாக இருந்தனர். இந்நிலையில், கூலி படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால் தான் கூலி படப்பிடிப்பு தாமதமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், இன்னொரு பக்கம் வேட்டையன் படத்திற்காக டப்பிங் கொடுக்க ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதன்படி இன்று முதல் வேட்டையன் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், ரஜினியும் அதில் பிஸியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

வேட்டையன் படத்தின் டப்பிங் முடிந்ததும் கூலியில் நடிக்கவுள்ள ரஜினி, மேலும் 2 அல்லது 3 படங்களில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த மூன்றில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் இரண்டு படங்களின் இயக்குநர்கள் யார் என்பது குறித்து விரைவில் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் இயக்கும் கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Tags :
#VettaiyancinemamovieRajinikanthT. J. Gnanavel
Advertisement
Next Article