கோடை வெயில் எதிரொலி : இளநீர் விலை ரூ.90 ஆக உயர்வு!
10:14 AM Apr 28, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        கடுமையான வெயிலின் தாக்கத்தால் இளநீரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது ஒரு இளநீர் சராசரியாக ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
                 Advertisement 
                
 
            
        தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு, உடலினை குளிர்ச்சியாக்கவும், நீர்நடுநிலைத்தன்மையை கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.
ரூ. 20, 30 க்கு விற்பனையான இளநீர் தற்போது ரூ. 40க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றின் விலைகளும், பழங்களின் விலையும் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 Next Article   
         
 
            