Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் திடீரென வந்த புகை! அச்சத்தால் குதித்த 4 பயணிகள் படுகாயம்!

09:34 PM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

ஓடும் ரயிலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானில் இருந்து புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் வெளியே குதித்ததில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூருக்கு் அம்ரிஸ்தர் மெயில் ரயில் இன்று காலை புறப்பட்டது. ஷாஜகான்பூர் நோக்கிச் சென்ற ரயில், மிரான்பூர் கத்ரா - ஃபதேகஞ்ச் நகர்களுக்கு இடைப்பட்ட பாலத்தைக் கடக்கும்போது, பொதுப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானிலிருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். சிலர் ரயிலில் இருந்த சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றனர். அதற்குள் சில பயணிகள் அச்சத்தின் மிகுதியால் ரயிலில் இருந்து குதித்தனர்.

இதில், 4 பயணிகள் படுகாயமடைந்ததாக ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் ஷாஜகான்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் அளித்த தகவலின்படி, ரயிலில் இருந்த தீயணைப்பானின் தலைப்பகுதியில் உள்ள பொத்தான் அழுத்தமாக பொருந்தாமல் இருந்ததே புகை வெளியேறக் காரணம் எனத் தெரிகிறது. எனினும் இது விபத்தா? அல்லது சதிச்செயலா என்ற கோணத்தில் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
Bilpurfrantically jumpednews7 tamilNews7 Tamil UpdatesNorthern RailwaypanicPunjab MailShahjahanpur Junctionsustained injuries
Advertisement
Next Article