For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திடீரென குறுக்கிட்ட மழை... பஞ்சாப் – கொல்கத்தா இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
10:06 PM Apr 26, 2025 IST | Web Editor
திடீரென குறுக்கிட்ட மழை    பஞ்சாப் – கொல்கத்தா இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தம்
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்.26) கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.

Advertisement

கொல்கத்தா அணி பவுலர்களை பவர் பிளேவில் அலறவிட்ட பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் அடித்தனர். இதையடுத்து ஆண்ட்ரே ரஸல் பிரியான்ஷ் ஆர்யா-வை 69 ரன்களில் அவுட்டாக்கி அதிரடியான பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இருப்பினும் ஒருபுறம் பிரப்சிம்ரன் சிங் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார்.

6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் அடித்த பிரப்சிம்ரன் சிங் மொத்தமாக 83 ரன்கள் அடித்து வைபவ் அரோராவிடம் ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியால் பஞ்சாப் அணி 14 ஓவரில்களிலேயே 160 ரன்களை எட்டியது. அதன் பின்பு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 25 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 201 ரன்களை குவித்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

அதன்படி, கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 2 ரன்களுன், சுனில் நரேன் 4 ரன்களம் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறிக்கிட்டது. இதனையடுத்து, கொல்கத்தா அணி 7 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags :
Advertisement