அமெரிக்காவின் ராணுவ ஆயுத ஆலையில் திடீர் வெடிவிபத்து!
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தின் ராணுவ வெடிபொருள் ஆலை இயங்கி வருகிறது அந்த ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தினால் எழுந்த சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்களுக்கும் கேட்டுள்ளது.
இதனால் வீடுகள் குலுங்கியுள்ளது. மேலும் சிலர் வெடிவிபத்து ஏற்பட்ட காட்சிகளை பதிவு செய்துள்ளனர். இந்த வெடி விபத்து சம்பவத்தில் 19-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகவில்லை. இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த குறித்து தகவல் அறிந்த அவசரகால மேலாண் கழகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே மேயர் பிராட் ராக்போர்டு, "இது நம்முயை சமூகத்தில் ஏற்பட்ட சோக சம்பவம் என தெரிவித்துள்ளார்.