Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் புறநகர் ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றம்!

10:12 PM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

புயல் காரணமாக, சென்னையில் புறநகர் ரயில்கள் நாளை (டிச.4) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

​மிக்ஜாம் புயல் தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது.  இது மேலும் வலுவடைந்து நாளை (டிச.4) முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:   ‘மிக்ஜாம்’ புயல் – கால்நடை உதவி மருத்துவருக்கான நேர்முகத்தேர்வு தேதி மாற்றம்! 

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய  மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழக அரசு நாளை (டிச.4)  பொது விடுமுறை அறிவித்துள்ளது.   இந்த நிலையில், சென்னையில் புறநகர் ரயில்கள் நாளை (டிச.4) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :
ChennaiCycloneCyclone ChaungHeavy rainfallIndiaMichaungnews7 tamilNews7 Tamil UpdatesSuburban trains
Advertisement
Next Article