For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வில் தோல்வி - மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை, சின்ன கொடுங்கையூரில் நீட் தேர்வில் தோல்விடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
04:00 PM Aug 12, 2025 IST | Web Editor
சென்னை, சின்ன கொடுங்கையூரில் நீட் தேர்வில் தோல்விடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி   மாணவி தூக்கிட்டு தற்கொலை
Advertisement

சென்னை, சின்ன கொடுங்கையூர் ஸ்ரீ வாரியர் நகர் நாராயணசாமி கார்டன் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் குமார் வயது 42. இவர் தி நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் சஞ்சி ஸ்ரீ மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் மதன ஸ்ரீ 17. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள மதன ஸ்ரீ  மருத்துவராக வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுதி இருந்தார்.

Advertisement

சமீபத்தில் வெளியான  நீட் தேர்வு முடிவுகளில் மதன ஸ்ரீ குறைந்த மதிப்பெண்கள் பெற்று  தோல்வியடைந்துள்ளார். இதனால் மதன ஸ்ரீ கடந்த இரண்டு மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11:30 மணி அளவில் வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கொடுங்கையூர் போலீசார் மதன ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ஸ்டான்லி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement