Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள் - நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!

10:12 AM Jun 29, 2024 IST | Web Editor
Advertisement

கோவை அருகே சிறுவனை கேட்டின் வெளியே விட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது தெருநாய்கள் சுற்றி வளைத்ததும் நொடிப் பொழுதில் அந்த குழந்தையை காப்பாற்றிய தந்தை காப்பாற்றியுள்ளார்.

Advertisement

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை
வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது மகனை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குள்
சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெருநாய்கள் குழந்தையை நோக்கி
ஓடி வந்துள்ளது.

இத்தனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் நொடிப் பொழுதில் அந்த சிறுவனை சுற்றிவளைத்தது. தெருநாய்கள் சுற்றி வளைப்பதை
பார்த்து சிறுவன் கூச்சலிடவே, கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று
கொண்டிருந்த தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்டுள்ளார்.

இந்த நிலையில், அங்கிருந்து தெருநாய்கள் வந்த வேகத்தில் திரும்பின. இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் சிறுவன் நான்கு
தெரு நாய்கள் வருவதைப் பார்த்து கல்லை எடுப்பதும், நொடிப் பொழுதில் தெரு நாய்கள்
சிறுவனை சுற்றி வளைப்பதும் , அச்சத்தில் இருந்த சிறுவனை தந்தை காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அண்மைக்காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள்
தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது

Tags :
childrenCoimbatoredogsStray Gogs
Advertisement
Next Article