Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரியில் டிச.4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை!

01:34 PM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதுச்சேரி,  காரைக்கால்,  ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் என்றும் அது திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாயன்று காலை தெற்கு ஆந்திரம் வடதமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!

இதன் காரணமாக, வரும் 4-ம் தேதி புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை காலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Tags :
collegesholidayleavenews7 tamilNews7 Tamil UpdatesPuducherryRainSchools
Advertisement
Next Article