Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#StopHarassment | 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... ஜோத்பூரில் கொடூரம்!

10:17 AM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

ஜோத்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாய் திட்டியதால் கோபமடைந்து கடந்த 25ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். சிறுமி காணாததை அறிந்த பெற்றோர்கள் அவரை நீண்ட நேரமாக தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காததால் அச்சமடைந்த பெற்றோர், அன்று மாலை சூரசாகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி இரவு நேரத்தில் ஜோத்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாக அமர்ந்திருந்திருக்கிறார். இந்த நிலையில், அங்கு வந்த இரண்டு நபர்கள் சிறுமியிடம் பேச்சுகொடுத்து மருத்துவமனையின் பின்புறமுள்ள மருத்துவக் கழிவுக் கிடங்குப் பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மறுநாள் பிற்பகலில் வெளியே வந்த சிறுமி, இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் சம்பவம் நடந்த மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவக் கழிவுகளை கொட்டும் கிடங்கை தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டு ஆதாரங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, போலீசார் அந்த மருத்துவமனையில் துப்புறவு பணி செய்யும் இரண்டு இளைஞர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
investigationjodhpurPoliceRajasthanSexual assaultSexual harassmentStop Harrassment
Advertisement
Next Article