”தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
“நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். பருவமழை முன்கூட்டியே தொடங்குவதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 2005 ஜூன் மாதம் முதல் காரிப் பருவத்தில் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 5.661 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தில் பயிரிடப்பட்ட 5130 வட்சம் ஹெக்டேர் பரப்பளவைவிட 0.525 வட்சம் ஹெக்டேர் 10% அதிகமாகும்.
இதனால் மாநிலம் முழுவதும் நோடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது மாநிலத்தில் பெய்துவரும் பரவலான மழை மற்றும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நண்ணீர் போதுமான அளவில் உள்ளதன் காரணமாக விவசாய உற்பத்திக்குத் தேவைப்படும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை உற்பத்தியாளர்களால் இந்திய அரசின் வழங்கல் திட்டத்தின்படி 2025 ஏப்ரல் முதல் 2005 ஆகஸ்ட் வரை வழங்கிடவில்லை. மேலும் அவர்களால் மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 57 விழுக்காடு அளவிற்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய காரிப் மற்றும் எதிர்வரும் ராபி பருவத்திற்கு உரப் பற்றாக்குறையை தவிர்த்திடும் வாகயில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய 27.823 மெட்ரிக் டன் யூரியா, 15.831 மெட்ரிக் டன் டிஎபி. 12:422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98.123 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிடத் தேவையான அறிவுரைகளை இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்திற்கு வழங்கிடுமாறு இந்தியப் பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டுள்கிறேன்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.