For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 152வது கூட்டு திருப்பலி விழா - ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

08:17 AM May 30, 2024 IST | Web Editor
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 152வது கூட்டு திருப்பலி விழா   ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை
Advertisement

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 152வது கூட்டு திருப்பலி விழா மற்றும் தேர்பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். 

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது
மிகவும் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம். இந்த ஆலயத்தின் 152 ஆம் ஆண்டு புனித வணக்க மாதா பெருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

இந்த சிறப்பு திருப்பலியில் பரமக்குடி துணை பங்குத்தந்தை பாஸ்டின் பாரதி கலந்து கொண்டு திருப்பலியை சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து வான வேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது. மேளதாளங்கள் முன் செல்ல புனித மிக்கேல் அதிதூதரின் திரு உருவத்தை சுமந்து சென்ற மூன்று தேர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளை சுற்றி வலம் வந்தன. இந்த திருப்பலி நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Tags :
Advertisement