கோலாகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழா!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் திருவிழா கோலாகலமாக கொண்டாடபடுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டு திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாட்கள் பல்வேறு
சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் முக்கிய தேர் திருவிழாவான இன்று மேதகு ஆயர், அந்தோணிசாமி கும்பகோணம் தலைமையில் அந்தோணியார் திருத்தல உதவி பங்கு தந்தை அருட்பணி யூஜின் குன்னூர் ஆகியோர் தலைமையில் சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் நடைபெற்றது.
பின்பு நடைபெற்ற விழாவில், பறவை போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தேரில் புனித அந்தோனியார் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற புனித அந்தோணியாருக்கு உப்பு வீசி மாலை செலுத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். அந்தோனியார் ஆலயத்தில் புறப்பட்ட தேர் ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக குன்னூர் வந்தடைந்தது. இதில் பல்வேறு மக்கள் ஜாதி மத பேதமின்றி அனைவரும் பல்வேறு இடங்களிலும் அந்தோனியார் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலத்தில் கலந்துகொண்டு பாடல்களை பாடி வந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் பங்குத்தந்தை மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், இளைஞர்கள், மகளிர் பங்கு மக்கள் செய்திருந்தனர்.