Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SrilankaElection | வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணும் பணி தொடக்கம்!

04:39 PM Sep 21, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நாளை பிற்பகல் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.

Advertisement

2019-ம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். 2022 ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்க இடையே கடும் போட்டி நிலவியது.

2 மணி நிலவரப்படி, நுவரெலியா 70% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொனராகலையில் 65% வாக்குகளும் மாத்தறையில் 62% வாக்குகளும் பதிவாகியுள்ளது. ரத்னபுராவில் 60% வாக்குகளும் கொழும்புவில் 60% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாது­காப்பு படை­யினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது.

Tags :
News7TamilRanil WickremesingheSrilankaSriLanka DecidesSriLanka ElectionsSriLanka Elections 2024Srilankan Tamils
Advertisement
Next Article