For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழ்நாடு கொண்டுவர உதவ கோரிக்கை" - வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்!

01:00 PM Jul 03, 2024 IST | Web Editor
 இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழ்நாடு கொண்டுவர உதவ கோரிக்கை    வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்
Advertisement

இலங்கையில் உயிரிழந்த ஒரத்தநாடு கோபால்சாமி என்பவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன்குடிக்காட்டைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவருக்கு மனைவி சுகுணா மற்றும் குழந்தைகள் உள்ளனர். கோபால்சாமி கடந்த ஜூன் 27ம் தேதி இலங்கையில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்கு சென்றார். பின்னர், கம்போடியா செல்ல கொழும்பு விமான நிலையம் சென்ற போது ஜூன் 29-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், இலங்கையில் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “நீட் தேர்வு விலக்கு குறித்த தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது :

ஒரத்தநாடு தாலுக்கா, சேதுராயன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர், இலங்கையில் உள்ள அவரது உறவினர்களை காணச் சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 28ம் தேதி கொழும்பு விமான விமான நிலையத்திலேயே இறந்து விட்டார். தற்போது அவரது உடல், மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரை இழந்து வாழும் அவரின் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று அவரது உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
Advertisement