For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Indonesia நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
02:53 PM Jan 23, 2025 IST | Web Editor
 indonesia நிலச்சரிவு   உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு
Advertisement

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் நாள்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

இதன் மூலம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 பேரை காணவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement