Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு - PINK நிற ஜெர்சியில் களமிறங்கும் தெ.ஆப்பிரிக்க வீரர்கள்.!

01:18 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

இந்தியா- தென்னாப்பிரிக்கா இடயேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள் PINK நிற ஜெர்சியில் களமிறங்குகிறார்கள்.

Advertisement

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.


அந்த வகையில் முதலில் டி20 தொடர் முடிந்தது,  அதை சமன் செய்தது இந்தியா. இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

கே.எல். ராகுல் தலைமையில் ஒருநாள் அணி களமிறங்குகிறது. கடைசியாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்து இந்தியா.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

இரு அணிகளும் இதுவரை 91 ஆட்டங்களில் நேருக்கு நேராக மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா 50 ஆட்டங்களிலும் இந்தியா 38 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 3 ஆட்டங்கள் முடிவில்லை. கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் இந்தியா 3 முறையும், தென்னாப்பிரிக்கா 2 முறையும் வென்றுள்ளன.

இந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில்  தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா அணி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை முன்னெடுத்து, பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Cricketind vs saIndiaSouth Africas
Advertisement
Next Article