For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சாரி… நோ கமெண்ட்ஸ்" - திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு நடிகர் #Rajinikanth பதில்!

12:59 PM Sep 28, 2024 IST | Web Editor
 சாரி… நோ கமெண்ட்ஸ்    திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு நடிகர்  rajinikanth பதில்
Advertisement

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் சாரி... நோ கமெண்ட்ஸ் என பதிலளித்துள்ளார்.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் மனசிலாயோ பாடல் அண்மையில் வெளியாகி தற்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடல் கடந்த 20ம் தேதி வெளியாகி கவனம் பெற்றது.

முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை கடந்த 16ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன், அபிராமி, கிஷோர் ஆகியோரின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. தர்பாருக்கு பிறகு படம் முழுவதும் போலீசாக நடிப்பது வித்தியாசமாக இருந்தது" என்றார். தொடர்ந்து, ரஜினிகாந்த்திடம் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், "சாரி.. சாரி... நோ கமெண்ட்ஸ்" என பதிலளித்தார்.

Tags :
Advertisement