For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாதியில் நின்ற #SK23 படப்பிடிப்பு - காரணம் என்ன?

07:42 PM Sep 19, 2024 IST | Web Editor
பாதியில் நின்ற  sk23 படப்பிடிப்பு   காரணம் என்ன
Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது.  இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நாயகியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்தா நடிக்கிறார். இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘துப்பாக்கி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும், பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த சூழலில், 'எஸ்கே 23' படத்தின் படப்பிற்கு முடிவடைவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.முருகதாஸ் மும்பை சென்று சல்மான் கானின் புதிய படமான ’சிக்கந்தர்’ படப்பிடிப்பை துவங்கியதாக கூறப்படுகிறது. சிக்கந்தர் படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்தபின்பே ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement