Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘குரங்கு பெடல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

06:29 PM Apr 11, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் திரைப்படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான  ‘அயலான்’ திரைப்படம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது. மேலும், ‘அயலான்’  திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றது. அயலானின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 'அமரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்ததாக அவரின் சகோதரர் கைது!

'அமரன்' திரைபடத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் கமல்கண்ணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து அவரின் தயாரிப்பு நிறுவனம் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிக்கூடம், கோயில் ஆகியவை அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்  மற்றும் திரைப்படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘குரங்கு பெடல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

மேலும், குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
#cinemaupdates#FirstLookAmaranKalaiArasuKuranguPedalsivakarthikeyansivathakpsSKPSRJProductionsTeaserTheMontageMedia
Advertisement
Next Article