For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#StopHarassment | கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு! தந்தையும் சாலை விபத்தில் பலி எனத் தகவல்!

08:09 AM Aug 23, 2024 IST | Web Editor
 stopharassment   கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு  தந்தையும் சாலை விபத்தில் பலி எனத் தகவல்
Advertisement

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவராமனின் தந்தையும் நேற்றிரவு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக சிவராமன் உட்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அப்போது தப்ப முயன்ற நிலையில் முக்கிய குற்றவாளியான சிவராமனின் கால் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதனிடையே கைது நடவடிக்கைக்கு முன்பாக சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது. இது விசாரணையின் போது தெரியவரவே அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் சிவராமன் மீது மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளதாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சிவராமனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (23.08.2024) அதிகாலை 5.30 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது ஒருபுறம் இருக்க சிவராமனின் தந்தை அசோக்குமாரும் நேற்று இரவு 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, காவேரிபட்டிணம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அசோக்குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.https://x.com/news7tamil/status/1826807999186264127

Tags :
Advertisement