Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிப் படுகொலை - 3 பேர் கைது!

08:28 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன்
கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே
பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை
சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி(22) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும்
கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர்,  அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர்.

சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நந்தினி
வேலை செய்து வந்தார். இந்நிலையில் இரவு நந்தினியை அழைத்துச் செல்வதற்காக
கார்த்திக் பாண்டி வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கார்த்திக்
பாண்டியை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : அடுத்த மாதம் தொடங்குகிறது டென்னிஸ் நாக் அவுட் சாம்பியன்ஷிப் போட்டி! – தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தகவல்!

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தங்கல் காவல்துறையினர் கார்த்திக் பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நந்தினியின் சகோதரர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்
பாண்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் சகோதரர்கள் பாலமுருகன் மற்றும் தனபாலன் அவரது நண்பர் சிவா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
arresteddeathkilledmarried couplePolicesivakasi
Advertisement
Next Article