For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை - போலீஸ் விசாரணை!

08:36 AM Apr 29, 2024 IST | Web Editor
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை   போலீஸ் விசாரணை
Advertisement

கணவர் சித்த மருத்துவர் சிவன் நாயர், மனைவி பிரசன்னா குமாரி இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிய  மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரைச் சேர்ந்தவர் சிவம் நாயர் (வயது 72) சித்த மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னா (வயது 60) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனும் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். வயதான தம்பதி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சித்த மருத்துவரான சிவம் நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பார்த்து இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது சிவம் நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் வீட்டுக்குள் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர். கொலை செய்து விட்டு நகை, பணம் திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். வயதான சித்த மருத்துவர் அவரது மனைவி இருவரும் வீட்டிற்குள் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement