For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜாமின் வழக்கு - 10 நாட்களில் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...
04:19 PM Mar 24, 2025 IST | Web Editor
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...
ஜாமின் வழக்கு   10 நாட்களில் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது நீதிபதிகள் :-

இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்ன ஆனது?.

செந்தில் பாலாஜி தரப்பு :-

இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என குறிப்பிட்ட உத்தரவு இல்லை.

நீதிபதிகள் :-

இந்த விவகாரத்தில் எந்தவித advantage எடுக்கக்கூடாது என தெரிவித்திருந்தோம், அது என்ன?.

செந்தில் பாலாஜி தரப்பு :-

இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்கு அவகாசம் வழங்குங்கள்.

நீதிபதிகள் :-

அவகாசம் வழங்க முடியாது. நீங்கள் கூறியதை பதிவு செய்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம்?. ஆனால் அதனை செந்தில் பாலஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

நீதிபதிகள்:-

மேலும் கடந்த முறை நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை, அதனால் நீங்கள் advantage எடுத்துக்கொள்வீர்களா?. இது சரியான நடைமுறை அல்ல, இவ்வாறு தொடர்ச்சியாக காலந்தாழ்த்துவது ஒருவரின் நிலைப்பாட்டையே காட்டுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க முடியாது.

செந்தில் பாலாஜி தரப்பு :-

இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தவில்லை, எனது தரப்புக்கு இரண்டு நாள் அவகாசம் வழங்கினால் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறேன். எனவே அவகாசம் வழங்க வேண்டும்

நீதிபதிகள்:-

உச்ச நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றவுடனேயே செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இதுவரையில் செந்தில் பாலாஜி உரிய பதிலை அளிக்கவில்லை. எனவே அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இதுபோன்று பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல” என தெரிவித்தனர்.

தொடர்ந்து 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags :
Advertisement