Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவில் பரபரப்பு!

06:49 AM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர்.  பின்னர்,  துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர்.

இதையும் படியுங்கள் : உத்தரகாண்ட் – ஆட்சியில் பாஜக இருக்கும் போது இடைத்தேர்தலில் கொடி நாட்டிய காங்கிரஸ்!

இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் பைடனின் அனைத்து பிரசாரக் கூட்டங்களும் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AmericaDonald trumpFormer US presidentshoot
Advertisement
Next Article