Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலியல் குற்றச்சாட்டு - #ActorJayaSurya மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு!

08:28 AM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

விசாரணைக் குழுவில் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில்  நடிகர் ஜெயசூர்யா மீது கேரள போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Advertisement

கேரளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக  குற்றம் சாட்டினார்.

இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார்.

இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

மலையாள திரையுலகில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக கிளம்பியதால் மலையாள நடிகர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. 2016 ல் தன்னை மியூசியம் காவல் நிலையதிற்குட்பட்ட பிரபல ஹோட்டலில் வைத்து சித்திக் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல் விடுத்தார் என டிஜிபி-க்கு மின்னஞ்சலில் புகார் வந்த நிலையில் சித்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து எர்ணாகுளம் ஆலுசா பகுதியில் உள்ள நடிகையின் வீட்டில் விசாரணை நடைபெற்றது. கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் சித்திக் , இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
case filedHema CommitteeJayasuryaJustice Hema Committee reportKerala
Advertisement
Next Article