For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் குற்றச்சாட்டு | கைதாகிறாரா மலையாள நடிகர் #Siddique?

01:18 PM Sep 24, 2024 IST | Web Editor
பாலியல் குற்றச்சாட்டு   கைதாகிறாரா மலையாள நடிகர்  siddique
Advertisement

நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில், மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின.

கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றம்சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து போலீசாரும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, நடிகர் சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தக்கல் செய்தார். இந்த நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் இன்று (செப். 24) தள்ளுபடி செய்தது. இந்த சூழலில், நடிகர் சித்திக்கை தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் அறிவித்துள்ளது. அதனுடன், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டன.

Tags :
Advertisement