For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மலையாள திரையுலகின் பாலியல் விவகாரம் - #ActorBaburaj மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

01:56 PM Sep 03, 2024 IST | Web Editor
மலையாள திரையுலகின் பாலியல் விவகாரம்    actorbaburaj மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
Advertisement

கேரள பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளித்த புகாரின்பேரில், மலையாள நடிகர் பாபுராஜ் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கேரளத்தில் பெண் தொழிலாளர்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக ஹேமா அறிக்கை தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.

கேரள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து 51 பேரிடம் வாக்குமூலம் பெற்று, ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டி, மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், கேரள திரைப்படத் துறையானது ஒருசில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், புதிதாக வரும் நடிகைகள் வாய்ப்புக்காக எதற்கும் சரணடைவார்கள் என்ற எண்ணம் துறையில் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் :ஆந்திரா, தெலங்கானா கனமழை: முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் – #JrNTR அறிவிப்பு!

முன்னதாக நடிகர் பாபுராஜ் மீது திரைத் துறையைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மலையாள நடிகர் பாபுராஜ் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், 2019ம் ஆண்டு நடிகர் பாபுராஜ் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக அடிமாலி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வாக்குமூலத்தை பதிவு செய்த இடுக்கி மாவட்டம் அடிமாலி காவல்துறை வழக்கு பதிவு செய்து தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக, நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement