For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தோசையில் Sorry கேட்கும் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த்.. வைரலாகும் வீடியோ!

06:52 PM Jul 22, 2024 IST | Web Editor
தோசையில் sorry கேட்கும் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த்   வைரலாகும் வீடியோ
Advertisement

சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் சாரி என ஆங்கிலத்தில் தோசை சுட்டுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

2018-ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகர் விஷ்ணுகாந்த். அதனைத் தொடர்ந்து, 2022-ல் என்றென்றும் புன்னகை தொடரில் நடித்தார். எனினும், 2022ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் கிடைத்த நிலையில், திடீரென தனது திருமணத்தை அறிவித்து, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். எனினும், சின்னத்திரை நடிகை சம்யுதா உடனான அந்த திருமண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்துக்கொண்டு மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தற்போது குடிகண்டலு என்ற தெலுங்கு மொழித் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இத்தொடர் ஆந்திரம், தெலங்கானாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
விஷ்ணுகாந்த் உடன் நடிகை தேஜஸ்வினி கௌடா நாயகியாக நடித்து வருகிறார். இந்தத் தொடரில் இருவரின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் ஏராளம். இவர்களின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பல சினிமா காதல் பாடல்களுடன் வைரலாவது வாடிக்கை.

இந்நிலையில், நடிகர் விஷ்ணுகாந்த் தோசை சுட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் விஷ்ணு உடன் நடிப்பவர்கள் இருப்பதால், சீரியல் காட்சிக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அடிக்கடி கோவம்கொள்ளும் தேஜ்ஸ்வினியை சமாதானம் செய்ய, சாரி என ஆங்கிலத்தில் தோசை சுட்டுக்கொடுக்கும் விஷ்ணுவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement