"மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்.." - வாஸ்கோடகாமா படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
"மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்.." என்கிற வசனங்களோடு வாஸ்கோடகாமா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நகுல் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த மாதம் வெளியானது.
தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த மாதம் வெளியானது.
அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வாஸ்கோடகாமா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனம் கவனம் பெற்றுள்ளது.
 
  
  
  
  
  
 