For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” -வைரமுத்து உருக்கம்

10:27 AM Feb 15, 2024 IST | Web Editor
“உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன”  வைரமுத்து உருக்கம்
Advertisement

சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ள நிலையில் இதுதொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Advertisement

சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்கம் மூடப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ள நிலையில் இதுதொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது. இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை,  சிந்து பைரவி,  பூவே பூச்சூடவா,  புன்னகை மன்னன்,  ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரை வளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன.

மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது.  இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம்,  வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும், நன்றி உதயம்” எனக் கூறியுள்ளார்.

Advertisement