Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை! - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

07:29 AM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 5,000 கனஅடிக்கும் மேலும் என 25,000 கனஅடிக்கும் அதிகமான உபரிநீர், காவிரியில் திறக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : யூரோ கால்பந்து தொடர் 2024 : 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின் அணி!

குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, குஷாலங்கரா, சோம்வார்பேட்டை தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

Tags :
Heavy rainholidayKodaguKushalnagaraMadikeriSchoolsSomwarpete taluk
Advertisement
Next Article