For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை!

09:26 PM Nov 15, 2023 IST | Web Editor
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ  மாணவிகள் பிரார்த்தனை
Advertisement

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Advertisement

இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வரும் உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டி-2023,  தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும்  நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதேபோன்று அரை இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து பலப்பரீட்சை செய்து இந்தியா தோல்வியடைந்தது.

இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில், இதுவரையிலும் பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் இயங்கி வரும் தனியார்
பன்னாட்டு கல்வி நிறுவனம் சார்பில், பள்ளியின் வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட
மாணவ,மாணவிகள் இன்று நடைபெறும் உலக கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்தை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் தேசியக்கொடி ஏந்தியவாறு இந்தியா வெற்றி பெற வேண்டும் என கரகோஷங்களும் எழுப்பினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மேலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
Advertisement