நெல்லையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!
திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானதில், 5ம் வகுப்பு பயிலும் பிரதீஸ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சென்றுள்ளனர். அப்போது திடீரென அந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ஐந்தாம் வகுப்பு பயிலும் பிரதீஸ் என்ற மாணவன் விபத்து நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஆட்டோவில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றி சென்ற நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில், கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்ண வந்தா நாய் கூட்டங்களால் ஆட்டோ கவிழ்ந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.