சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்ளிட்ட 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மூலம் சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 16 மற்றும் 17வது மக்களவையில் சிறப்பான பங்களிப்பு அளித்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு சன்சத் விருதுகளை அறிவித்துள்ளது.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.-களின் விவரம் :
பருத்ஹரி மஹ்தாப் (பிஜு ஜனதா தளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்), என்.கே.பிரேமச்சந்திரன் (சமூகப் புரட்சிக் கட்சி), ஸ்ரீரங் அப்பா பர்னே (சிவசேனை), ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை உத்தவ் தாக்கரே), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனை), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
மேலும் மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), பித்யூத் பரன் மஹாதோ (பாஜக), பி.பி.சௌத்ரி (பாஜக), மதன் ராத்தோர் (பாஜக), சி.என்.அண்ணாதுரை (திமுக), திலீப் சைக்கியா (பாஜக) ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு நிரந்தரக் குழுக்களான நிதி மற்றும் விவசாயத் துறைகளுக்கும் சிறந்த செயல்திறனுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.