Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சைஃப் அலிகான்!

கொள்ளையனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீடு திரும்பினார்.
05:44 PM Jan 21, 2025 IST | Web Editor
கொள்ளையனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீடு திரும்பினார்.
Advertisement

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த ஜன.16ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத கொள்ளையனால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சைஃப் அலிகான் படுகாயம் அடைந்த நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

சைஃப் அலிகானை தாக்கிய நபரை கண்டுபிடிக்க 20 தனிப்படைகளை அமைத்த மும்பை காவல்துறை, 7 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்தது. விசாரணையில் குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீரர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலிகான் இன்று வீடு திரும்பியுள்ளார். கொள்ளையனின் தாக்குதலில் பலத்த காயத்துடன் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

Tags :
bollywooddischargehospitalKareena KapoorMumbaiSaif Ali Khan
Advertisement
Next Article