For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134 கோடி வருவாய்: தேவசம் போர்டு

12:31 PM Dec 16, 2023 IST | Web Editor
சபரிமலையில் 28 நாள்களில் ரூ 134 கோடி வருவாய்  தேவசம் போர்டு
Advertisement

சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக  திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்தது.  ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நடைதிறக்கப்பட்ட முதல் 28 நாள்களில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக,  வருமானம் ரூ.20 கோடிக்கு மேல் குறைந்துள்ளது.  திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் ரூ. 154.77 கோடியாக இருந்த வருமானம் இந்த ஆண்டு ரூ. 134.44 கோடியாக உள்ளது.

மொத்த வருவாயில் அப்பம் விற்பனை மூலம் ரூ.8.99 கோடியும்,  நன்கொடையாக ரூ.41.80 கோடியும் கிடைத்துள்ளது.  அரவண பாயாசம் விற்பனை மூலம் ரூ.61.91 கோடியும், தங்கும் விடுதிகளின் வருமானம் மூலம் ரூ.34.16 லட்சமும் கிடைத்துள்ளது.  இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் ரூ.71.46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இலவச உணவு வழங்கும் திட்டம் (அன்னதானம்) நடத்துவதற்கான பங்களிப்பும் கடந்த சீசனில் ரூ.1.20 கோடியிலிருந்து ரூ.1.14 கோடியாக குறைந்துள்ளது.

பக்தர்கள் வருகை குறைவு

சபரிமலையில் எதிர்பார்த்ததை விட குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையே வருமானம் குறைவுக்கு காரணம்,  நடைப்பயணமாக வரும் பக்தர்களின் வருகையும் குறைந்துள்ளது.  இந்த ஆண்டு இதுவரை 18.16 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.  கடந்த முறை இதே கால கட்டத்தில் பக்தர்களின் வருகை 18.88 லட்சமாக இருந்தது.  அதிகபட்சமாக டிசம்பர் 8-ம் தேதி 88,744 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

"சென்னை வெள்ளம் மற்றும் தெலங்கானாவின் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக முதல் 2 வாரங்களில் எதிர்பார்த்ததை விட பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது.  வாக்குப்பதிவுக்குப் பிறகு, பக்தர்களின் வருகை அதிகரித்தது.  உதாரணமாக, அரவண விற்பனை ஒரு நாளைக்கு 2.25 லட்சம் டின்களில் இருந்து 3.25 லட்சம் டின்களாக உயர்ந்துள்ளது.  டிசம்பர் 12-ம் தேதி 4.25 லட்சம் டின்கள் விற்கப்பட்டு விற்பனை உச்சத்தை எட்டியது" என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement