For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆவணி மாத பூஜை – #Sabarimala நடை திறக்கப்பட்டது : நாளை முதல் பக்தர்கள் அனுமதி!

08:06 PM Aug 16, 2024 IST | Web Editor
ஆவணி மாத பூஜை –  sabarimala நடை திறக்கப்பட்டது   நாளை முதல் பக்தர்கள் அனுமதி
Advertisement

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட்டது.

Advertisement

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக மட்டும் இன்றி, ஒவ்வெரு மாத பிறப்பிலும், விஷு, ஓணம், போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், ஆவணி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நடையை திறந்து வைத்து ஐய்யப்பனுக்கு தீபாராதனை காண்பிப்பார். பின்னர் இரவு 10 மணியளவில் நடை சாத்தப்படுகிறது.

இதனையடுத்து நாளை அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறுகிறது.  பின்னர் காலை 7 மணியளவில் உஷ பூஜையும், மதியம் 12.30 மணியளவில் உச்ச பூஜையும் அதனைத் தொடர்ந்து களபாபிஷேகமும், இதனையடுத்து மாலையில் தீபாராதனையும், இரவு புஷ்பாபிஷேகம் மற்றம் படி பூஜையும் நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள் : நாளை வெளியாகிறது ‘#THEGOAT’ ட்ரெய்லர்! – புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அனைத்து நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜையும், இரவு 7.00 -மணியளவில் படி பூஜையும் நடைபெறும். பின்னர் ஆக. 21ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement