For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
07:47 AM Jun 14, 2025 IST | Web Editor
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
Advertisement

கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டுமின்றி ஒவ்வெரு மாத துவக்கத்திலும் 5 நாட்கள் மாதாந்திர பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

Advertisement

இதையும் படியுங்கள் : நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… ரிசல்ட் பார்ப்பது எப்படி?

அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக இன்று (ஜுன் 14) மாலை நடை திறக்கப்படுகிறது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார். அதன்பின் கற்பூர ஆழியில் தீ மூட்டப்படுகிறது. இன்றைய தினம் பூஜைகள் நடைபெறாத நிலையில், நாளை காலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு பூஜைகள் வரும் 19ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர், அன்றைய தினம் (ஜுன் 19) இரவு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement