For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BRICSSummit | ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

09:48 AM Oct 22, 2024 IST | Web Editor
 bricssummit   ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
Advertisement

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்.

Advertisement

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கலாச்சார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் இன்று மற்றும் நாளை (அக். 22, 23) நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும். இம்மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதையும் படியுங்கள் : “வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” - #IMD தகவல்!

சர்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவர்கள் கலந்துரையாட உள்ளனர். இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ரஷ்யாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

Tags :
Advertisement