#RRvsPBKS : பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
06:48 AM Apr 14, 2024 IST
|
Web Editor
இதில் அதர்வா தைடே 18 ரன்னிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து பேர்ஸ்டோவுடன் கேப்டன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ 15 ரன்னிலும், சாம் கர்ரன் 6 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். ஜித்தேஷ் சர்மா 29 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் ப்ரம்சிம்ரன் சிங்கிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களமிறங்கினார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ரன்னும், ஜித்தேஷ் சர்மா 29 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - தனுஷ் கோட்டியன் இருவரும் ஓபனிங் ஆடினர். இதில் ஜெய்ஸ்வால் 39 ரன்கள், தனுஷ் 24 என இந்த ஜோடி நிதானமாக தொடங்கியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்கள், ரியான் பராக் 23 ரன்கள் துருவ் ஜுரேல் ஆறு ரன்கள் என ஒவ்வொருவராக வெளியேற, ஷிம்ரோன் ஹெட்மயர் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் ராஜஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டார்.
Advertisement
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
Advertisement
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 27-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப். 13) முல்லன்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர்.
19.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
Next Article