For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு?

06:46 PM Nov 23, 2023 IST | Web Editor
டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு
Advertisement

டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா நிரந்தரமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர்களில் ஒருவர். இந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய தோல்வி அடைந்திருந்தாலும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடச் செய்தவர் இவர். 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பையை தோனிக்கு பிறகு 2ஆவது முறையாக ரோகித் சர்மா கைப்பற்றி கொடுத்துள்ளார். எம்.எஸ்.தோனி 2010 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று கொடுத்த நிலையில் ரோகித் சர்மா 2018 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் டிராபியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து நடந்த முக்கியமான தொடரான உலகக் கோப்பை 2023 தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் தான் இந்த உலகக் கோப்பை 2023 தொடருடன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா விளையாடிய 148 ஒரு நாள் போட்டிகளில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 சதமும், 29 அரைசதங்களும் அடங்கும். ஹிட்மேன், சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா அதிரடிக்கு பெயர் போனவர். அவர், டி20 கிரிக்கெட்டில் இல்லையென்றால், அந்த கிரிக்கெட்டை பார்ப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும், என்று நினைக்கும் ரசிகர்கள் ஏராளாம்.

டி20 மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக ஆடக் கூடிய ரோகித் சர்மா களத்தில் இருக்கும் வரையில் பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம். ஆனால், அவர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியாகும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மட்டுமின்றி, விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், டி20 கிரிக்கெட்டில் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பிசிசிஐ முழு சுதந்திரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 36 வயதாகும் ரோகித் சர்மா, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும், இதுதொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement