Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RoadAccident | கோவில்பட்டி அருகே பயங்கர விபத்து - தினபூமி பத்திரிகை உரிமையாளர் உயிரிழப்பு!

07:50 PM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

கோவில்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தினபூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் மோதி, கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தினபூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் காரில் பயணித்த அவரது மகன் ரமேஷ் படுகாயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்த ரமேஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Accidentcar accidentdeathhospitalkovilpattinews7 tamilPolice
Advertisement
Next Article