டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இரண்டு நாளாக நடந்த இந்த போட்டில் இந்திய அணி ஆல் அவுட்டாகி 471 ரன்கள் குவித்தது. இதையடுத்து தற்போது மழை காரணாமாக இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 134 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவர் இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக சதங்கள் அடித்த பட்டியலில் ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்தில் அடித்த சதத்துடன் மொத்தம் 7 சதங்கள் அடித்து தோனியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி 6 சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருக்கடுத்து விக்கெட் கீப்பராக இந்திய அணிக்கு அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டு சதங்களுடன் விருத்திமான் சஹா மூன்றாவது இடத்தில் உள்ளார்.