For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இனமே எழு உரிமை பெறு" - சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு!

இனமே எழு உரிமை பெறு என சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
06:38 AM May 11, 2025 IST | Web Editor
இனமே எழு உரிமை பெறு என சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
 இனமே எழு உரிமை பெறு    சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு
Advertisement

பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ இன்று (மே 11) நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே, சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது.

Advertisement

மேலும், இந்த மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் வருகை தருமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அதாவது மாநாட்டு திடலின் ட்ரோன் காட்சிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுடன் 'இனமே எழு உரிமை பெறு' என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement