For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RIPSitaramYechury - சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!

01:28 PM Sep 14, 2024 IST | Web Editor
 ripsitaramyechury   சோனியா காந்தி  உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு, சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். சுவாசப் பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவ மாணவர்களின் ஆராயச்சிக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல், டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக் கொண்டுவரப்பட்டு, சீதாராம் யெச்சூரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது உடலுக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ராஜிவ் சுக்லா உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொருளாளரும் மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதே போல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

Tags :
Advertisement