Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கக்கடலில் உருவானது ‘ரிமல்’ புயல்!

09:33 PM May 25, 2024 IST | Web Editor
Advertisement

மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருமாறியது. 

Advertisement

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22 ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்றது.  இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை புயலாக வலுபெறும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று தாமதமாக தற்போது வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, சூறாவளி புயலாக தீவிரமடைந்து இன்று 5:30 மணி அளவில் மையம் கொண்டிருந்தது.

இன்று வடக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் கெபுபாராவிற்கு (வங்காளதேசம்) தென்-தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்கம்) தென்-தென்கிழக்கே 350 கி.மீ, மற்றும் கேனிங்கிற்கு (மேற்கு வங்கம்) தென்-தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது நாளை நள்ளிரவில் வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரை, சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.

இந்த புயலால் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
CycloneHeavy rainIMDRimal
Advertisement
Next Article