For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாட்டில் ராஜினாமா? - ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல்!

05:30 PM Jun 08, 2024 IST | Web Editor
வயநாட்டில் ராஜினாமா    ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல்
Advertisement

வயநாட்டில் ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலுமே அபார வெற்றி பெற்றார்.

ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியை கட்டாயமாக ராஜினாமா செய்தாக வேண்டும். இதன் பின்னர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்தும். எனவே கடந்த முறை வயநாடு எம்பியாக செயல்பட்ட ராகுல் காந்தி இந்த முறை வயநாட்டி எம்பியாகவே தொடர்வாரா? அல்லது வயநாட்டை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதி எம்பியாக செயல்படுவாரா? என கேள்விகள் எழுந்துள்ளது.

18வது மக்களவை கூட்டத் தொடர் வருகிற ஜூன் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி குறித்து அடுத்த நான்கு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தொடர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாக அறியப்படுகிற ரேபரேலி தொகுதியில் கடந்த நான்கு முறையாக சோனியா காந்திதான் எம்பியாக இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என ரேபரேலி மக்களிடம் சோனியா காந்தி பேசியிருந்தார். இந்த நிலையில் ரேபரேலி தொகுதி எம்பியாகவே ராகுல் காந்தி தொடர்வார் என நம்பதகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
Advertisement