ரீல்ஸ் மோகம்... நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. வைரல் வீடியோ!
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். சினிமா பாடலுக்கு நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : இரவு உணவிற்குப் பிறகு ஏதாவது சாப்பிட ஆசையா? தூக்கத்தை மேம்படுத்தும் உணவுகள் இதோ!
அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. இலங்கையில் வேகமாக வந்த ரயிலின் கதவுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தவாறு பெண் ஒருவர் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, கதவு திடீரென மூடப்பட்டதால், அவர் ரயிலில் இருந்து கீழே விழச்சென்றார். அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சுமார் 104 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அவர் ஒரு பெரிய விபத்துக்கு எவ்வளவு அருகில் வந்தார் என்பதைப் பார்த்து சமூக ஊடக பயனர்கள் திகைத்துப் போயுள்ளனர். அந்த பெண் காயமின்றி தப்பித்தாலும், இந்த சம்பவம் சமூக ஊடக சாகசங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக நகரும் ரயில்களில் ரீல்ஸ் எடுப்பது எவ்வளவு ஆபத்து என்பதை பார்க்க முடிகிறது.