For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

RCBvsPBKS | பஞ்சாப் பேட்டிங் - பைனலுக்கு முன்னேறுமா? பெங்களூர்!

ஐபிஎல் 2025-ன் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
07:35 PM May 29, 2025 IST | Web Editor
ஐபிஎல் 2025-ன் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
rcbvspbks   பஞ்சாப் பேட்டிங்   பைனலுக்கு முன்னேறுமா  பெங்களூர்
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி இன்று(மே.29) நடைபெறவுள்ளது.

Advertisement

இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத நிலையில், இன்று நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புக்காக மோதுகின்றன. அதனால், இப்போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி பஞ்சாபில் மகாராஜா யாதவீந்திர சிங் மைதனாத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸை வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூர் அணி பிளேயிங் லெவன்:-

விராட் கோலி, பில் உப்பு, ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா.

பஞ்சாப் அணி பிளேயிங் லெவன்:-

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ் , ஷ்ரேயாஸ் ஐயர்
நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஸ்மதுல்லா உமர்சாய், ஹர்பிரீத் பிரார் , கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங்

Tags :
Advertisement